Wednesday, April 24, 2013

இராணுவ, ஆயுத வலிமையுள்ள அமெரிக்கா...அதிகார, பொருளாதார வலிமையுள்ள இங்கிலாந்து....உலக கிருஸ்தவ தலைமை இடமான ரோம்... இம்மூவரின் மூலம் முறைதவறி பிறந்த குழந்தையான இஸ்ரேல்...இவைகளின் ஊதுகுழல்களான ஐ.நா சபை...மற்றும் ஊடகங்கள்...ஏவல் நாய்களான சி.ஐ.ஏ..., மொசாத், நேட்டோ படைகள்....போன்றவைகள் தான்....உலகில் நடந்துவரும் பல மோசமான நிகழ்வுகளுக்கும் முக்கிய காரணிகள் என்ற உண்மை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..? இஸ்லாமோ அல்லது முஸ்லிம்களோ அல்ல என்ற உண்மையும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..?

Wednesday, August 26, 2009

Hijab : ஹிஜாப்

1 2 3 4 5 6 7 8 

9

10 11 12

 

13  15 16 17 18 19 

14

Monday, August 24, 2009

BEST PHOTOS FROM REUTERS

1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 

BEST PHOTOS FROM REUTERS

Sunday, August 23, 2009

PICTURE OF THE DAY:)

“Lord Mountbatten, Nehru and Edwina”
nehru
This is Our Life,Do u agree with this?
It seems so funny and raises so many questions...
2

Symptoms of Swineflu (A H1N1)
3
Treatment "Hijama":Sucking out toxins for good health.
4 Hijama comes from the Arabic word Hijam, or 'suck' and this method of treatment has been recommended by the Prophet Mohammad (PBUH). According to one Hadith (Sayings of the Prophet): "If there is any good in your medical treatments, it is in the knife of the cupper, drinking honey, or cauterisation with fire, as appropriate to the cause of the illness, but I would not like to be cauterised." (Reported by Al Bukhaari, 10/139).
5 "தமிழ்ர்களுக்கு 1983 ஐ போல 1990 என்று கூறிய சிராஜ் சிங்களவர்கள் துவக்கி வைத்த பள்ளிவாசல் படுகொலைகள் முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து 80,000 தமிழ் முஸ்லிம்களை 48 மணி நேர அவகாசத்தில் வெளியேற்றிய புலிகளின் அராஜகம் வரை காலந்தோறும் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்க படும் அநீதிகளை....., இந்த அநீதிகளின் வரலாறு தான் தமிழ் பேசினாலும் தங்களை தனி தேசமாக உணரவைத்தது"
அறி(வி)ப்போடு நிற்கும் அரசின் சட்டங்கள்!
7
அரசு சார்பாக நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட விளம்பரமாகும். விளம்பரம்தான் இன்று கொடுக்கப்பட்டதேயன்றி, இச்சட்டம் நீண்ட நாட்களாக நடைமுறையில் உள்ளதாகும். ஆனால் இச்சட்டம் ஏட்டளவில்தான் உள்ளது என்பதை நாம் நடைமுறையில் பார்த்துவருகிறோம். இந்திய அளவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவதோ, அல்லது அந்த இயக்கங்களின் தலைவர்களின் படங்களை பயன்படுத்துவதோ,அந்த இயக்கங்களின் கொள்கைகளை எடுத்து முழங்குவதோ குற்றம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், என்ன நடக்கிறது..?
தமிழக அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக ஆதரித்து பேசுகிறார்கள். இவர்களில் பலர் தீவிரமாக பலர் ஆதரித்தும் பேசிவருகின்றனர். பலரது கட்சி கூட்டங்கள், மாநாடுகளில் தவறாமல் தடைசெய்யப்பட்ட தலைவர்களின் படம் இடம்பெறுகிறது. ஆதரித்து பேசிவரும் அரசியல் தலைவர்கள் சட்டம் அறியா பாமரர்கள் அல்ல. சட்டம் படித்த மேதைகள் . இருப்பினும் இவ்வாறு அவர்களால் செய்யமுடிகிறது எனில், சட்டம் என்ன செய்துவிடும் என்ற துணிவுதான். பெரும்பாலும் கைது செய்யபடமாட்டார்கள். அப்படியே கைது செய்தாலும் முதலில் உள்ளே போடுவார்கள் . பின்பு தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சுவார்கள். பின்பு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று கோர்ட்டு அறிவிக்கும். பின்பு ஜாமீனில் விடுதலை என்பார்கள். பின்பு அந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாகிவிடும். பின்பு வழக்கம் போல ஆதரவு புராணத்தை பாடவேண்டியதுதான். இதுதானே தமிழகத்தில் நடந்துவரும் நிகழ்வாக இருக்கிறது?
அப்படியாயின் சட்டத்தை நிலைநாட்டவேண்டியவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அரசின் சார்பாக ஒரு சட்டம் போடப்பட்டால் அதை யார் மீறினாலும் நடவடிக்கை தாட்சன்யமின்றி எடுக்கப்பட்டால்தான் அந்த சட்டத்தின் மீது மக்களுக்கு அச்சமிருக்கும். மாறாக, நடவடிக்கைகள் வேண்டியோர்-வேண்டாதோர் என்ற அடிப்படையில் இருக்குமானால் அச்சட்டத்தால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை என்பதே மக்கள் கருத்தாகும்.
சிரிப்பு :) போலிசின் போலி கைதுவேட்டை !!
6டில்லி நவ. 18-வடக்கு டில்லியில் 2005, அக்டோபரில் ஜி.டி. கர்னல் சாலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தொடர்புடையவர்களை டில்லி சிறப்பு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், காஷ்மீரில் இருந்து வந்த பேருந்தில் வந்து இறங்கிய முகமது மொரிப் குயாமர், இர்ஷாத் அலி என்ற இரண்டு பேரை சிறப்பு போலீசார் கைது செய்தனர். அவர்கள் அல்-பாதர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கணக்கு காட்டினர்.இவர்களின் கைது பற்றி சர்ச்சை கிளம்பியதை தொடர்ந்து, இதை பற்றி சி,பி,ஐ. விசாரணை நடத்த டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
இந்த விசாரணையின் அறிக்கையை கடந்த 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. அதில் கைது செய்யப்பட்டு இருவரும் தீவிரவாதிகள் அல்ல; அப்பாவிகள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவர்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்து அதை நிரூபிப்பதர்காக போலி ஆதாரங்களை தாக்கல் செய்த சிறப்பு போலிஸ் பிரிவை சேர்ந்த வினய் தியாகி, ரவீந்தர் தியாகி, சுபாஷ் வாட்ஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும், அவர்கள் மீது தகுத நடவடிக்கை எடுக்கவும் சி.பி.ஐ அனுமதி கோரியுள்ளது.

அலற வைக்கும் ஆபரேஷன் முத்துமாலை!–அதிர்ச்சியில் இந்தியா !

”பாகிஸ்தானால் ஆபத்து” என்று சும்மா பேசு பவர்கள், அக்கறையுடன் அலற வேண்டியது இப்போது சீனாவையும் பார்த்துதான்! 

பத்து எப்போதும் தூரத்தில்தான் இருக்கும் என்பதில்லை. நம் நிழலுக்கு அடியிலேகூட இருக்கக் கூடும். உதாரணத்துக்கு… சீனா! (Muthamizh-Chennai)‘சீன ராணுவம் வலுவாக வளர்ந்து வருகிறது. எல்லை-யில் பெருமளவில் ராணுவத்தைக் குவித்து வரு-கிறது. பாகிஸ்தானைவிட சீனா பெரிதும்நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதைச் சமாளிக்க நமது விமானப் படையிலும் அதிநவீன விமானங்கள்வழங்கப் பட வேண்டும்’ என்று அலறியவர் இந்தியாவின் விமானப் படை தலைமை மார்ஷல் பாலி ஹோமி மேஜர்.

மெரிக்காவுக்கு இணையான ராணுவ மற்றும் பொருளாதார பலத்துடன் சீனா உருவாகி வருகிறது என்று அமெரிக்க உளவுத் துறையின் சமீபத்திய அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவையே சீனா பயமுறுத்துகிறது என்றால், இந்தியாவுக்கு?
சமீபத்தில் ஹைனன் தீவில் அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல் தளத்தை சீனா அமைத்தது. சீனப் பத்திரிகை ஒன்று இது குறித்த தகவலைப் பெருமையாக வெளியிட்டபோது, இந்தியாவுக்குப் பேயறைந்தது போல் இருந்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் தளத்தில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் 20 கப்பல்-களைமறைத்து வைக்க முடியும்.

லக அளவில் அணு ஆயுதம் மற்றும் பயங்கர ஆயுதங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவிஞ் ஞானிகளின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட்) எடுத்த செயற்கைக்கோள் புகைப் படத்தில் இந்தியாவுக்கு இன்னும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லி உட்பட இந்திய நகரங்களைக்குறி வைத்தபடி சீனா ஏவுகணைகளை நிறுவியிருப்பது தெரிய வந்திருக்கிறது. சீனாவின் கிங்கை மாகாணத்தில் டெலிங்கா அருகே 2,000 சதுர கி.மீ பரப்பளவில் கிட்டத் தட்ட 60 ஏவுகணைத் தளங்களை சீனா அமைத் துள்ளது.

1

ரு பட்டனைத் தட்டினால் போதும், ஒரு சில நிமிடங்களில் டி.எஃப்-21 ரக ஏவுகணைகள் விண்ணில் சீறிப் பாய்ந்து தாக்கும். இந்த ஏவுகணைகளில் அணு குண்டுகளையும் ஏற்றி அனுப்ப முடியும்!

னது நாட்டுக்குள் இருந்து இந்தியாவைக் குறி-வைப்பதற்கு அடுத்ததாக, அண்டை நாடுகளுக்குள் புகுந்து, தனது தளங்களை நிறுவி வருகிறது சீனா. இதில் முக்கியமானவை, துறைமுகங்கள். சரக்குகளைக் கொண்டுசெல்வதற்காக என்று நொண்டிச்சாக்கு சொன்னா-லும், துறைமுகம் அமையும் இடங்களில் எல்லாம் விரைவில் கடற்படைத் தளத்தை சீனா அமைக்கும் என்று தகவல். உலக அளவில் கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்கு-மதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு சீனா.

 2

ளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டுசெல்கிறது. இந்தக் கப்பல்களின் பாதுகாப்புக்கு எனக் கூறிக்கொண்டு பாகிஸ்-தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்பன்தோடா ஆகிய இடங்களில் துறைமுகங்களை அமைத்துள்ளது சீனா.

ந்தத் திட்டத்துக்கு சீனா வைத்துள்ள பெயர், ‘முத்து மாலை’. முத்துக்களைக் கோத்தால் முத்துமாலை கிடைப்பது போன்று, இந்தத் துறைமுகங்களை இணைப்பதுதான் சீனாவின் பகீர் பாதுகாப்புத் திட்டம். கண்ணை மூடிக்கொண்டு யோசித்தால், இந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் சீனாவின் இரும்பு வளையம் அமைக்கப்பட்டு-விட் டது. ஒருவிதமான சுழலில் சிக்கி இருக்கிறது இந்தியா.

சீனாவின் எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் வழிக்கும், வங்க தேசம் மற்றும் மியான்மர் துறைமுகத்துக்கும் சம்பந்தமே இல்லை. இதனால், இந்தத் துறைமுக அபி விருத்திப் பணி மேற்கொள்வது இந்தியா-வுக்கு நெருக்கடி தருவதற்காகத்தான் என்று சந்தேகிக்கப்படு கிறது.

3

விர, சீனா கமுக்கமாக இந்திய எல்லையில் இது-வரை கிட்டத்தட்ட 3 லட்சம் வீரர்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் சீனா படுகில்லாடி. ஆனால், நாமோ படு லேட்! இப்போதுதான் அலர்ட் ஆன இந்தியா, இன்னும் சில ஆண்டுகளில் சீன எல்லைப் பகுதியில் பாதுகாப்புக்காக இரண்டு புதிய பிரிவுகளைத் தொடங்கி, மொத்தம் 40 ஆயிரம் வீரர்-களை அனுப்ப உள்ளது. பல்வேறு ராணுவ அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள என அதிரடியாக 5 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா செலவிட உள்ளது.

ந்தியாவை இவர்கள் எதிரியாக நினைக்க என்ன காரணம்?

ந்தியா – சீனா இடையே 3,500 கி.மீ-. நீளம் எல்லை உள்ளது. இதில் சீனா – காஷ் மீர் பகுதியில் 38 ஆயிரம் சதுர கி.மீ. தூரத்தை ஆக்கிர-மித்து வைத்துள்ளது. இந்தியா-வின் கிழக்குப் பகுதியில் 90 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பைத் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறது. அதாவது அருணாச்சலப் பிரதேசம்… சீனாவுடையதாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற்று வந்த அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கணேஷ் கோயு உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகள் சீனா செல் வதாக இருந்தது.

னைவருக்கும் விசா கொடுத்த சீன தூதரகம், கணேசுக்கு மட்டும் விசா தரவில்லை. இதற்கு அவர்கள் கூறிய காரணம், கணேஷ் ஒரு சீனப் பிரஜை. சொந்த நாட்டுக் குள் செல்ல விசா தேவை இல்லை என்றது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து, கடைசியில் அந்தப் பயணத்தையே இந்தியா ரத்து செய்தது.

ணேஷ் என்ற தனிப்பட்ட இளைஞ-னுக்கு ஏற்பட்டதல்ல அந்தச் சிக்கல். அது மொத்த இந்தியனுக்கும் வரப்போகிற ஆபத்து.

பாகிஸ்தானால் ஆபத்து” என்று சும்மா பேசு பவர்கள், அக்கறையுடன் அலற வேண்டியது இப்போது சீனாவையும் பார்த்துதான்!

சீன படைத்துறை புகைப்படங்கள்

4

 

5

 

6

அலற வைக்கும் ஆபரேஷன் முத்துமாலை!–அதிர்ச்சியில் இந்தியா !